அடி லீலா கிருஷ்ணா - Adieela Song Lyrics

அடி லீலா கிருஷ்ணா - Adieela

அடி லீலா கிருஷ்ணா - Adieela


Lyrics:
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை
அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம்
ஆளைத் தேடுதடி
ஒயிலாம் நடையும் முகிலாம் ஜடையும்
ஊஞ்சல் போடுதடி
நீ ஒரு பருவச் சோலை
நான் ஒரு இளமைக் காளை
வாழ்வில் தினமும் ஒன்றாய் தேடிக் கொண்டால்
ஏனடி பூ மாலை
அடி ஒரு நாள் ராணி அருகே வாடி
காலம் போகுதடி
இது ஓடை நீரில் ஆடிட வேண்டும்
கோடை காலமடி
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா...

அடி லீலா கிருஷ்ணா - Adieela Song Lyrics, அடி லீலா கிருஷ்ணா - Adieela Releasing at 11, Sep 2021 from Album / Movie அந்தமான் காதலி - Andaman Kadhali (1978) Latest Song Lyrics