தில்லுபருஜானே - Dillu Baru Jaane Song Lyrics

தில்லுபருஜானே - Dillu Baru Jaane

தில்லுபருஜானே - Dillu Baru Jaane


Lyrics:
தில்லுபருஜானே
தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
அரரரே ஆஜாஆஜா...
தில்லுபருஜானே
தில்லு தீவானே தித்திக்கிற தேனே...
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல...
கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
காதல் கதை ஜாடைகளில் சொல்ல...
மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட
பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட
புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா...
உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா

தில்லுபருஜானே - Dillu Baru Jaane Song Lyrics, தில்லுபருஜானே - Dillu Baru Jaane Releasing at 11, Sep 2021 from Album / Movie கலைஞன் - Kalaignan (1993) Latest Song Lyrics