காலையில் கேட்டது - Kalaiyil Kettathu Song Lyrics

காலையில் கேட்டது - Kalaiyil Kettathu

காலையில் கேட்டது - Kalaiyil Kettathu


Lyrics:
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
***
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது
பெண் : புதுவித அனுபவம்
ஆண் : ஆ..ஆஹ ஹா
பெண் : முதல் முதல் அறிமுகம்
ஆண் : ஓ..ஓஹொ ஹோ..
பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
***
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ஆண் : ரகசியம் புரிந்தது
பெண் : ஆ..ஆஹ ஹா
ஆண் : அதிசயம் தெரிந்தது
பெண் : ஓ..ஓஹொ ஹோ..
ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

காலையில் கேட்டது - Kalaiyil Kettathu Song Lyrics, காலையில் கேட்டது - Kalaiyil Kettathu Releasing at 11, Sep 2021 from Album / Movie செந்தமிழ் பாட்டு - Senthamil Pattu (1992) Latest Song Lyrics