கண்களை தூது விட்டேன் - Kankalai Thoothu Song Lyrics

கண்களை தூது விட்டேன் - Kankalai Thoothu

கண்களை தூது விட்டேன் - Kankalai Thoothu


Lyrics:
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண்ண மணிக்குள் சேர்ந்திருப்பேன்
மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண் மணிக்குள் சேர்ந்திருப்பேன்
ஏணி மேல் ஏணி கொண்டு வான் வெளியில் பூ பறிப்பேன்
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம் இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு
கண்களுக்குள் உன்னை வைத்து காப்பதுதான் என் கடமை
கட்டில் என்னும் ராஜ்யத்தில் காதலி நான் உன் அடிமை
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

Releted Songs

கண்களை தூது விட்டேன் - Kankalai Thoothu Song Lyrics, கண்களை தூது விட்டேன் - Kankalai Thoothu Releasing at 11, Sep 2021 from Album / Movie முறை மாமன் - Murai Maaman (1995) Latest Song Lyrics