ஒரு கண் ஜாடை - Oru Kan Jaadai Song Lyrics

ஒரு கண் ஜாடை - Oru Kan Jaadai

ஒரு கண் ஜாடை - Oru Kan Jaadai


Lyrics:
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
நா ந ….
வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடு பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே
நா ந ….

ஒரு கண் ஜாடை - Oru Kan Jaadai Song Lyrics, ஒரு கண் ஜாடை - Oru Kan Jaadai Releasing at 11, Sep 2021 from Album / Movie அஞ்சான் - Anjaan (2014) Latest Song Lyrics