ஒருகுரல் கேட்குது பெண்ணே - Oru Kural Song Lyrics

ஒருகுரல் கேட்குது பெண்ணே - Oru Kural

ஒருகுரல் கேட்குது பெண்ணே - Oru Kural


Lyrics:
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா
மன கதவு திறந்திடுமா மோதி நானும் பார்க்கிறேன்
பழகிடுமா விலகிடுமா கனவிலும் நினைவிலும்
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா
முதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே
மனம் இன்று ஈரமாகி பாரமாகுதே
இதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே
இடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே
தனிமையில் தீயினை தீண்டி தீண்டி நானே
காயத்தோடு வாடும் நேரத்தில் விழிகளில் வரமென
எதிரில் நீயும் வந்தாய் வாழதோன்றுதே
உன் முகம் பார்க்கையில் கண்ணிலே தாய் முகம் வருவது ஏனடி
உன்னிடம் என்ன நான் வேண்டுகிறேன்
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
தொடாமலே தொட்டு பேசும் மூச்சுகாற்றின் வாசம்
விடாமலே என்னை இங்கு கூறுபோடுதே
படாமலே பட்டுபோகும் பட்டு போன்ற கேசம்
எழாமலே என்னை வீழ்த்தி வென்றுபோகுதே
உறவுகள் பிரிவேன வாழ்ந்து வந்தபோது
வானவில்லை காட்டிபோகிறாய் எரிமலை நடுவினில்
பனியை போலவந்து வீசிபோகிறாய்
உனக்கென தந்திட என்னிடம் உயர்ந்தது எதுவும் இல்லையே
உயிரையே தருகிறேன் கண்மனியே
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

ஒருகுரல் கேட்குது பெண்ணே - Oru Kural Song Lyrics, ஒருகுரல் கேட்குது பெண்ணே - Oru Kural Releasing at 11, Sep 2021 from Album / Movie வழக்கு எண் 19/8 - Vazhakku Enn 18/9 (2012) Latest Song Lyrics