பாடும்போது நான் - Paadum Pothu Naan Song Lyrics

பாடும்போது நான் - Paadum Pothu Naan

பாடும்போது நான் - Paadum Pothu Naan


Lyrics:
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே -
இன்ப நாளும் இன்று தானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

பாடும்போது நான் - Paadum Pothu Naan Song Lyrics, பாடும்போது நான் - Paadum Pothu Naan Releasing at 11, Sep 2021 from Album / Movie நேற்று இன்று நாளை - Netru Indru Naalai (1974) Latest Song Lyrics