தண்ணீர் விட்டோம் - Thaneer vittom Song Lyrics

தண்ணீர் விட்டோம் - Thaneer vittom

தண்ணீர் விட்டோம் - Thaneer vittom


Lyrics:
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்
எண்ணமெல்லாம் மெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமோ
மாதரையும் மக்களையும் வந்கன்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய்போல் கலங்குவதும் காண்கிலையோ

தண்ணீர் விட்டோம் - Thaneer vittom Song Lyrics, தண்ணீர் விட்டோம் - Thaneer vittom Releasing at 11, Sep 2021 from Album / Movie கப்பலோட்டிய தமிழன் - Kappalottiya Thamizhan (1961) Latest Song Lyrics