உன் பேரை சொல்லும் போதே - Unn Perai Sollum Pothe Song Lyrics

உன் பேரை சொல்லும் போதே - Unn Perai Sollum Pothe

உன் பேரை சொல்லும் போதே - Unn Perai Sollum Pothe


Lyrics:
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)
ஆண்:
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்:
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்:
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்:
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
ஆண்:
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)
ஆண்:
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்:
உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண் பெண் இருவரும்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … 
(இசை)

உன் பேரை சொல்லும் போதே - Unn Perai Sollum Pothe Song Lyrics, உன் பேரை சொல்லும் போதே - Unn Perai Sollum Pothe Releasing at 11, Sep 2021 from Album / Movie அங்காடித் தெரு - Angadi Theru (2010) Latest Song Lyrics