ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilaave Song Lyrics

ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilaave

ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilaave


Lyrics:
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண் : இளநீரூம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன
பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட
ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilaave Song Lyrics, ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilaave Releasing at 11, Sep 2021 from Album / Movie அரங்கேற்ற வேளை - Arangetra Velai (1990) Latest Song Lyrics