காதல் வந்து பொய்யாக - Kadhal Vandhu Song Lyrics

காதல் வந்து பொய்யாக - Kadhal Vandhu

காதல் வந்து பொய்யாக - Kadhal Vandhu


Lyrics:
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றை கூந்தல் மோதும் போதும்
நெற்றி பொட்டில் காய்சல் வந்து குடியேறும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்
கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலை போலே கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டி கொண்டால் அய்யோ பிடிக்கும் பைத்தியமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
காற்றில் கையை வீசிட தோன்றும்
மேகம் பார்த்து பேசிட தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும் போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்ய தெரியாதே
பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை
கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால் இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

காதல் வந்து பொய்யாக - Kadhal Vandhu Song Lyrics, காதல் வந்து பொய்யாக - Kadhal Vandhu Releasing at 11, Sep 2021 from Album / Movie சுந்தரபாண்டியன் - Sundarapandian (2012) Latest Song Lyrics