கண்ணே உந்தன் கண்ணில் - Kanne Unthan Kannil Song Lyrics

கண்ணே உந்தன் கண்ணில் - Kanne Unthan Kannil

கண்ணே உந்தன் கண்ணில் - Kanne Unthan Kannil


Lyrics:
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்
கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை எண்ணித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன்
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்
கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன்
மலரோடு வாழ்வேன் இது போதுமானது
கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது அதன்
மலரோடு வாழ்வேன் இது போதுமானது
கப்பல் ஒன்றை மூழ்க விட்டு கட்டுமரம் கண்டெடுத்தேன்
கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன்
முத்துச்சரம் முத்தம் தரும் கடன் வாங்கிக் கொள்கிறேன்
பிஞ்சு விரல் என்னைத் தொடும் அதில் தூங்கி கொள்கிறேன்
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்
உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
பிள்ளை என்னும் புத்தகத்தில்
வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன்
துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன்
அந்த கண்கள் கண்டுக் கொண்டே எந்தன் காலம் போகட்டும்
அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே எந்தன் ஜீவன் போகட்டும்
அங்கிள் உந்தன் கண்ணில் நான் என்னை பார்க்கிறேன்
அள்ளிக் கொள்ளும்போது நான் அன்னை பார்க்கிறேன்
கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை நம்பித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன்
கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்

கண்ணே உந்தன் கண்ணில் - Kanne Unthan Kannil Song Lyrics, கண்ணே உந்தன் கண்ணில் - Kanne Unthan Kannil Releasing at 11, Sep 2021 from Album / Movie வேட்டையாடு விளையாடு - Vettaiyaadu Vilaiyaadu (1989) Latest Song Lyrics