மனம் போன போக்கில் - Manam Pona Pokkil Song Lyrics

மனம் போன போக்கில் - Manam Pona Pokkil

மனம் போன போக்கில் - Manam Pona Pokkil


Lyrics:
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் நின்று தானே புதிர் போடுது
நீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி
நின்று காண இயலா வழிப் போக்கன் நானடி
நீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா
வந்து ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி
கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா...(மனம்)
காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும் புதுப் பொன்னின் வீணை நான்
வசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ
கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
அது தெரிந்து போகும் நேரம் வழியனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா......

மனம் போன போக்கில் - Manam Pona Pokkil Song Lyrics, மனம் போன போக்கில் - Manam Pona Pokkil Releasing at 11, Sep 2021 from Album / Movie காதல் ரோஜாவே - Kadhal Rojave (2000) Latest Song Lyrics