நான் முதன் முதல் பாடிய பாட்டு - Naan Muthal Muthal Song Lyrics

நான் முதன் முதல் பாடிய பாட்டு - Naan Muthal Muthal

நான் முதன் முதல் பாடிய பாட்டு - Naan Muthal Muthal


Lyrics:
நான் முதன் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்...(நான்)
போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் - அந்த
விடைகளில் புது யுகம் தோன்றும்
கேட்க மறந்த மனிதா உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் - அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்
சிரிக்க மறந்த மனிதா நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது புது
போராட்டம் காண நீ ........(முதல்)
கனவுகள் உயிர் பெற வேண்டும் - அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா - அது
கனவை மீட்டுத் தருமா
சிறைகளும் உடை படவேண்டும் - அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா - அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது நீ போராட ஓடி வா..(நான்)

நான் முதன் முதல் பாடிய பாட்டு - Naan Muthal Muthal Song Lyrics, நான் முதன் முதல் பாடிய பாட்டு - Naan Muthal Muthal Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் நாடு - Thaai Naadu (1989) Latest Song Lyrics