பாடுவோர் பாடினால் - Paaduvor Paadinaal Song Lyrics

பாடுவோர் பாடினால் - Paaduvor Paadinaal

பாடுவோர் பாடினால் - Paaduvor Paadinaal


Lyrics:
(இசை)
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
(இசை)
பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
(இசை)
பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம்பிறை
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாடுவோர் பாடினால் - Paaduvor Paadinaal Song Lyrics, பாடுவோர் பாடினால் - Paaduvor Paadinaal Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்ணன் என் காதலன் - Kannan En Kadhalan (1968) Latest Song Lyrics