பாட்டொன்று கேட்டேன் - Paatondru Ketten Song Lyrics

பாட்டொன்று கேட்டேன் - Paatondru Ketten

பாட்டொன்று கேட்டேன் - Paatondru Ketten


Lyrics:
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன்
குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை
குரலால் அழைக்கவில்லை
ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன்
நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை
நானதை எழுதவில்லை
குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை
ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை
அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை
இருவர் நினைவும் மயங்கியதாலே
யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை
ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை

பாட்டொன்று கேட்டேன் - Paatondru Ketten Song Lyrics, பாட்டொன்று கேட்டேன் - Paatondru Ketten Releasing at 11, Sep 2021 from Album / Movie பாசமலர் - Paasamalar (1961) Latest Song Lyrics