பெண்ணே காதல் வலி - Penne Kadhal Song Lyrics

பெண்ணே காதல் வலி - Penne Kadhal

பெண்ணே காதல் வலி - Penne Kadhal


Lyrics:
பெண்ணே காதல்
வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி
கண்ணால் கண்ணீர்
துளி எந்த நாளும்
பார்த்ததுண்டோ டி
பெண் என்றால்
ஆணுலகம் கவிதை
என்கிறதே கவிதை ஓர்
கை வாளாய் ஆளை
கொள்கிறதே
பெண்ணே
காதல் வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி
உண்மையில் நீ
பூ பந்தோ ஓஓ ஊர்
எரிக்கும் தீ பந்தோ ஓஓ
ஆணின் நெஞ்சம்
அம்மம்மா ஓஓ நீ
அடிக்கும் கார் பந்தோ
பெண்ணே காதல்
வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி
உன் மீது காதல்
வைத்து உயிர் உனக்கு
என்றான் ஹோ அம்மா
நீ எய்தும் கூட அதை
பொறுத்து நின்றான்
உந்தன் மீது
குற்றம் ஏதும் விழாமல்
செய்தான் உள் மனதில்
கண்ணீர் வெள்ளம்
விடாமல் பெய்தான்
கை அணைத்து
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே காலகாலம்
ஆணின் பாவம் வாராதோ
பெண்ணே
பெண்ணே
காதல் வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி
விட்டதை மீண்டும்
பெற விரும்பிடுதோ நெஞ்சம்
ஹோ தொட்டதை மீண்டும்
தொட்டு தொடர்கின்றதோ
எண்ணம்
பொத்தி பொத்தி
வைத்தால் கூட பொல்லாத
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல்
கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காய பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே
காதல் காலாவதி
காரணம் யார் சொல்லடி
அம்மா கண்ணில் கண்ணீர்
நதி காரணம் யார் சொல்லடி
அம்மா
உன்னாலே ஓர்
நிஜமே நிழலாய்
போகிறதே அம்மம்மா
ஓர் இதயம் தழலாய்
வேகிறதே
காதல் காலாவதி
காரணம் யார் சொல்லடி
அம்மா

பெண்ணே காதல் வலி - Penne Kadhal Song Lyrics, பெண்ணே காதல் வலி - Penne Kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie பம்மல் கே. சம்பந்தம் - Pammal K. Sambandam (2002) Latest Song Lyrics