செந்நீர் தானா - Senneer Thaana Song Lyrics

செந்நீர் தானா - Senneer Thaana

செந்நீர் தானா - Senneer Thaana


Lyrics:
செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம் பாதி கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே
(செந்நீர் தானா)
யே ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
யே ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே
தேகத்தில் உள்ள எழும்புக்கு
ஒரு வெறி நாயும் துரை நாயும் மோதுதே
மானத்தில் வாழும் நெஞ்சமோ
தன்மானத்தை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே ஓ...
ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே
ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே
சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பரிபோனதே...
(செந்நீர் தானா)
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்கானி செருப்புக்கு தோதா போச்சு

செந்நீர் தானா - Senneer Thaana Song Lyrics, செந்நீர் தானா - Senneer Thaana Releasing at 11, Sep 2021 from Album / Movie பரதேசி - Paradesi (2013) Latest Song Lyrics