சிங்கார மானே பூந்தேனே - Singara Maane Poonthene Song Lyrics

சிங்கார மானே பூந்தேனே - Singara Maane Poonthene

சிங்கார மானே பூந்தேனே - Singara Maane Poonthene


Lyrics:
சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
ஹொய் ஹொய் ஹொய்
கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
ஹொய் ஹொய் ஹொய்
சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஹொய் ஹொய் ஹொய்
தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல் ஓ... ஓ...(சிங்கார)
வானம் பொழியாமல் பூமி குளிராது
நாடும் செழிக்காது பூ விழியே..ஓ... ஓ...
பூமி விளையாமல் எதுவும் நடக்காது
மறந்து போனாயே மலர் விழியே..ஓ... ஓ...
தென்பாண்டியின் தலைவன்
புடவை மடிப்பின் பின் போவதா..ஓ... ஓ...
மன்றாடியே மயங்கி
தவித்து தவித்து திண்டாடவா ஓ... ஓ... ஓ... ஓ...
அடி வாடாமல் நீ எனை வாட்டாதேடி
நான் சூடாமலே தடை போடாதேடி
உனைச் சேராமல் போனால்
ஒரு ராகம் தாளம் ஏதடி.....(சிங்கார)
காதல் வலை போட்டு ஆடும் விளையாட்டு
தோக்குறேன் தோக்குறேன் புரியலையே
பாத்து எதிர் பாத்து ஆச்சு நாள் ஆச்சு
பேச்சு வெறும் பேச்சு சரி இல்லையே
சிங்காரியே இருக்கும்
துணையை வெறுக்க சன்னியாசியா ஆ... ஆ...
அம்மாடியே அதிஷ்டம்
இருக்கு உனக்கு சம்சாரியா ஆ... ஆ... ஆ... ஆ...
என் காதல் மன்னா உன் இடம் மாத்தையா
அட கன்னா பின்னா என புலம்பாதையா
இது மாட்டாது மாமா உன் ரூட்ட மாத்திப் பாடையா
சிங்கார மானே பூந்தேனே......

சிங்கார மானே பூந்தேனே - Singara Maane Poonthene Song Lyrics, சிங்கார மானே பூந்தேனே - Singara Maane Poonthene Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய்மொழி - Thai Mozhi (1992) Latest Song Lyrics