தாயா தாரமா கேள்வி ஆகுமா - Thaaya Thaarama Kelvi Song Lyrics

தாயா தாரமா கேள்வி ஆகுமா - Thaaya Thaarama Kelvi

தாயா தாரமா கேள்வி ஆகுமா - Thaaya Thaarama Kelvi


Lyrics:
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாலிக் கட்டிக் கொண்டவ தாரமென்று வந்தவ
தக்க துணையாவாளே எந்நாளும் தான்
கொண்டவனைக் காப்பவ குற்றம் குறை தீர்ப்பவ
இல்லறத்தின் ஆதாரம் சம்சாரம் தான்
கை நிறைய சோறிடுவாள் கண்ணுறங்க பாயிடுவாள்
நாயகனின் பேர் விளங்க நல்ல பிள்ளை ஈன்றிடுவாள்
சம்சாரம் இல்லையேல் சந்தோஷம் ஏதடா
சன்யாசி தானடா...
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா..
பிள்ளை வரம் கேட்டவ பெத்தெடுத்து போட்டவ
தொட்டிலிட்டு தாலாட்டி பாலூட்டினாள்
எத்தனையோ ராத்திரி பட்டப்பகல் மாதிரி
கண் முழிச்சி நாள்தோறும் ஆளாக்கினாள்
பச்சப்பிள்ளை வாலிபனாய் ஆன பின்னும் காத்திடுவா
உச்சி முதல் கால் வரைக்கும் எண்ண வச்சு தேச்சிடுவா
அம்மாவைப் பாரடா அவளாட்டம் யாரடா
அறிஞ்சா நீ கூறடா...
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா
தாய் வேறு தாரம் வேறு பெண்கள் தானடா
ஆனாலும் ரெண்டும் ரெண்டு கண்கள் தானடா
தாயா தாரமா கேள்வி ஆகுமா
கேட்டால் கேள்விக்கு பதில் கிடைக்குமா....

தாயா தாரமா கேள்வி ஆகுமா - Thaaya Thaarama Kelvi Song Lyrics, தாயா தாரமா கேள்வி ஆகுமா - Thaaya Thaarama Kelvi Releasing at 11, Sep 2021 from Album / Movie தாயா தாரமா - Thaaya Thaarama (1989) Latest Song Lyrics