தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - Thendral Kaatre Song Lyrics

தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - Thendral Kaatre

தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - Thendral Kaatre


Lyrics:
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்
பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்
நாமிருவர் கையணைத்து
ஊர்வலமாய் போய் வரலாமா
இங்கு பூத்திருக்கும் பூக்களிடம்
வாழ்த்துக்களை வாங்கிடலாமா
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….
ஓஹோஹ்ஹோ……
சுள்ளுன்னு வெயில் ஏறுது
ஆமாடி அன்னக்கிளி
சில்லுன்னு காத்த தேடுது
ஆமாடி சொர்ணக்கிளி
சும்மாடி சுள்ளி பூக்குது
ஆமாடி பொன்னுமணி
சுமைதாங்கி நம்ம பாடுது
ஆமாடி தங்கமணி
ஊரு துளி நீரும் கொடுக்கும்…..
காடு நம்மை தாய்ப்போல் அணைக்கும்
நீரை சுமந்து வரும்
ஆகாய மேகங்களே
நான் உங்கள் நண்பன் இல்லையோ
தாழப் பறந்து வரும்
தட்டாரப் பூச்சிகளே
நான் உங்கள் அண்ணன் இல்லையோ
மூங்கில்களின் மேலே
மரங்கொத்திகளே நீங்க
மூக்கு நுனியாலே தினம் கொத்துறது ஏங்க
துளைப் போட்டாக்க பூங்காத்து குடியேறும்
அந்த ஓசைதான் தேன் பாட்டா உருமாறும்
என் காதாரதான் அத நான் கேக்குறேன்
அந்த பாட்டுகளை பாடம் பண்ணி
பால் நிலவில் பாடிடுவேன் நான்
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
சாதி சனங்களிடம்
சங்காத்தம் வேணாமுன்னு
காத்தோடு காலம் கழித்தேன்
கோயில் குளத்தை வச்சு
போராட்டம் பண்ணுறத
பாத்து நான் எட்டி இருப்பேன்
நாட்டிலுள்ள பேதம்
இந்த காட்டில் இல்லை சாமி
வேங்கை புலி சிங்கம்
இங்க என்ன மதம் காமி
இங்கு பூசல்கள் ஏசல்கள் கிடையாது
இதுபோலேதான் மேலான இடம் ஏது
ஓர் வம்பும் இல்ல வீண்வாதம் இல்ல
இங்கு சூரியன் போல் சந்திரன் போல்
சுதந்திரமாய் திரிஞ்சிடுவேன் நான்
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா
புள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்
பொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்
நாமிருவர் கையணைத்து
ஊர்வலமாய் போய் வரலாமா
இங்கு பூத்திருக்கும் பூக்களிடம்
வாழ்த்துக்களை வாங்கிடலாமா
தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா
துள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா

தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - Thendral Kaatre Song Lyrics, தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா - Thendral Kaatre Releasing at 11, Sep 2021 from Album / Movie அதர்மம் - Adharmam (1994) Latest Song Lyrics