வாராய் நீயே - Vaaraai Neeye Song Lyrics

வாராய் நீயே - Vaaraai Neeye

வாராய் நீயே - Vaaraai Neeye


Lyrics:
வாராய்.......நீயே வா....போற்றி வா......
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே.......(வாராய்)
எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு கூற இயலாதோ அதையே
பகவான் தனது தீர்ப்பில் நீயே நம்பி விடுவாயே....
உன்னை வாட்டும் துன்பம் யாவும் அவர் போக்கிடுவாரே
உன்னால் முடியா காரியம் பகவான் செய்வாரே
பகவானே செய்வாரே..........(வாராயே)
சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை வந்தால் போதுமே
இந்த சன்னதி முன் உந்தன் தலை பணிந்தால் போதுமே
உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம் அவரே உணருவார்
உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும் கண்ணால் உணருவார்
கண்ணாலே உணருவார்........(வாராயே)
நீ கேட்காமலே இங்கே நெஞ்சின் ஆசை கைகூடும்
மனத் தூய்மை உள்ளோர் வந்தே இங்கே சேவிக்கக்கூடும்
எல்லோர்க்கும் பொது ஞாயம் சொல்லும் சபையும் இதுவே
இவ்வுலகிலே எல்லோரில் பெரும் நீதிமான் இவரே..
பெரும் நீதிமான் இவரே.......(வாராயே)

வாராய் நீயே - Vaaraai Neeye Song Lyrics, வாராய் நீயே - Vaaraai Neeye Releasing at 11, Sep 2021 from Album / Movie பாட்டாளியின் சபதம் - Pattaliyin Sabatham (1958) Latest Song Lyrics