வானத்தை விட்டு - Vanathai Vittuvittu Song Lyrics

வானத்தை விட்டு - Vanathai Vittuvittu

வானத்தை விட்டு - Vanathai Vittuvittu


Lyrics:
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோவிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ
பாதம் எல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காதல் நீரில் ஆசை நீரை தேடி என்ன லாபமோ
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக
நான் எழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நானிருந்தேன் அழகை நாளும் வரைய
நான் வரையும் வேளையிலே நிறங்கள் ஓடி ஒளிய
வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது

வானத்தை விட்டு - Vanathai Vittuvittu Song Lyrics, வானத்தை விட்டு - Vanathai Vittuvittu Releasing at 11, Sep 2021 from Album / Movie ராமன் தேடிய சீதை - Raman Thediya Seethai (2008) Latest Song Lyrics