யார் கங்கை - Yaar Gangai Song Lyrics


Lyrics:
யார் கங்கை இதில்
பாவ அழுக்கின்
சுமை வைத்தது
யார் கண்கள் இதில்
ஈரம் கசிய
தீ வைத்தது
யார் நெஞ்சம் இதை
ஐயோ
அழ வைத்தது
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்
முடியும் வரை
ஆட்டமிடு
விடியும் வரை
வாழ்வோம் இங்கு
வெள்ளை தாளைப் போலே
வாழ்க்கை என்றும்
இருந்து விட்டால்
வண்ணமில்லை
துன்பம் இன்றி
இன்பம் இல்லை நெஞ்சே
தவறு இன்றி
பாடம் இல்லை
வழிகளிலே
வளைந்தாலென்ன
நதியனைத்தும்
கடல் சேருமே
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்
முடியும் வரை
ஆட்டமுண்டு
விடியும் வரை
வாழ்வோம் இங்கு
வருத்தமென்ன
இளங்கிளியே
யார் கங்கை இதில்
பாவ அழுக்கின்
சுமை வைத்தது
யார் கண்கள் இதில்
ஈரம் கசிய
தீ வைத்தது
யார் நெஞ்சம் இதை
ஐயோ
அழ வைத்தது
விதியதன் கைகளில்
நூல் பொம்மை நாம்

யார் கங்கை - Yaar Gangai Song Lyrics, யார் கங்கை - Yaar Gangai Releasing at 11, Sep 2021 from Album / Movie நெருங்கி வா முத்தமிடாதே - Nerungi Vaa Muthamidathe (2014) Latest Song Lyrics