காதல் பிரியாமல் கவிதை - Kadhal Piriyamal Song Lyrics

காதல் பிரியாமல் கவிதை - Kadhal Piriyamal

காதல் பிரியாமல் கவிதை - Kadhal Piriyamal


Lyrics:
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய்ச் செய்வாயா
இல்லை கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாப்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு
மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்....
காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே
என் போர்வையோடு உந்தன் ரத்தம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆ... ஆ... (காதல்)

காதல் பிரியாமல் கவிதை - Kadhal Piriyamal Song Lyrics, காதல் பிரியாமல் கவிதை - Kadhal Piriyamal Releasing at 11, Sep 2021 from Album / Movie பஞ்ச தந்திரம் - Panchatanthiram (2002) Latest Song Lyrics