கண்டுபிடி அவனை - Kandu Pidi Avanai Song Lyrics

கண்டுபிடி அவனை - Kandu Pidi Avanai

கண்டுபிடி அவனை - Kandu Pidi Avanai


Lyrics:
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்
மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்
முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை
யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை
திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
நீ என்னை தழுவிகொண்டால் என் நெற்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே தங்கம் தண்ணீரில் விளையுமடி
மாறாப்பை சரியவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்கட்டும் பழைய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீல இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்டுபிடி அவனை - Kandu Pidi Avanai Song Lyrics, கண்டுபிடி அவனை - Kandu Pidi Avanai Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னுடன் - Unnudan (1998) Latest Song Lyrics