மகாராணி உன்னை தேடி - Maharani Unnai Thedi Song Lyrics

மகாராணி உன்னை தேடி - Maharani Unnai Thedi

மகாராணி உன்னை தேடி - Maharani Unnai Thedi


Lyrics:
மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்
பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்
வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்
கை வந்து தொட்டது மெல்ல
காமத்து பாலுரை சொல்ல
இளமை பயிலும் தினம்
மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
மார்கழி பனித்துளி
பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட
அது தொடும் பாவமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும்
தன்னை மறந்த நிலையிலே
தென்பாண்டி முத்துக்கள் போலே
என்னென்ன கோலங்கள் மேலே
ரசிக்கும் கவிதை மனம்
மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மகாராணி உன்னை தேடி - Maharani Unnai Thedi Song Lyrics, மகாராணி உன்னை தேடி - Maharani Unnai Thedi Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆயிரம் வாசல் இதயம் - Aayiram Vaasal Idhayam (1980) Latest Song Lyrics