மலர்களில் ஆடும் - Malargalil Song Lyrics

மலர்களில் ஆடும் - Malargalil

மலர்களில் ஆடும் - Malargalil


Lyrics:
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பூமரதின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தாளாடும்
பால் வடியும் பசுங் கிளிகள் பேசாமல் பேசும் பொன்வண்டோ தேரோடும்
சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட வந்தேனே தோழி நீயம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம் எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம் எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட பெண் மானே நாணம் ஏனம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலர்களில் ஆடும் - Malargalil Song Lyrics, மலர்களில் ஆடும் - Malargalil Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணராமன் - Kalyanaraman (1979) Latest Song Lyrics