ஒரு ஆலம் பூவு - Oru Aalapoovu Athipoovu Song Lyrics

ஒரு ஆலம் பூவு - Oru Aalapoovu Athipoovu

ஒரு ஆலம் பூவு - Oru Aalapoovu Athipoovu


Lyrics:
மேலமாசி வீதியில மேளச் சத்தம் கேக்குதடி
மீனுக் கண்ணு மீனாட்சியின்
முத்துமணி மால ஒண்ணு
ஓம் மேனியிலே சூடிக் கொண்டு
சோடி ஒண்ணு தேடி வந்த
முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
அட முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா
மோகம் கொடுக்கும் மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு சிணுங்குதடி கை பட்டு....(ஒரு ஆலம்)
புன்னவனத்துப் பூங்குருவி சொன்னதிங்கே ஓம் பேரு
ஊதக் காத்து அடிக்குதையா ஓரப் பார்வ நீ பாரு
தனிமை என்ன வழி மறிச்சு தாளம் போட்டு சிரிக்குதடி
தாகம் என்ன அரவணச்சு தழுவிக் கொள்ளச் சொல்லுதடி
நேந்துக்கிட்ட சாமிக்கு நேத்திக் கடன் செய்யிறேன்
வா மணிக் குயிலே......
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா
பார்வையாலே ஒடம்புக்குள்ளே
பதியம் போட்ட வெடலப் புள்ள
நம்மைப் பிரிக்க யாரும் இல்ல
நடுவில் எந்த ஊரும் இல்ல
பழகிப் போச்சு அச்சம் இல்ல
பேச எதுவும் மிச்சம் இல்ல
நெஞ்சுக்குள்ள காத்தடிச்சு
நேரம் பாத்து சேத்திடுச்சு
முத்துமணி கட்டவா கட்டிக் கொண்டு ஒட்டவா
வா மணிக் குயிலே.......
ஒரு ஆலம் பூவு அத்திப் பூவப் பாத்ததுண்டா
ஒரு ஏலம் பூவு எலந்தம் பூவச் சேத்ததுண்டா

ஒரு ஆலம் பூவு - Oru Aalapoovu Athipoovu Song Lyrics, ஒரு ஆலம் பூவு - Oru Aalapoovu Athipoovu Releasing at 11, Sep 2021 from Album / Movie புண்ணியவதி - Punniyavathi (1997) Latest Song Lyrics