ஒரு காற்றில் அலையும் சிறகு - Oru kaatril alaiyum Song Lyrics

ஒரு காற்றில் அலையும் சிறகு - Oru kaatril alaiyum

ஒரு காற்றில் அலையும் சிறகு - Oru kaatril alaiyum


Lyrics:
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததொரு காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

ஒரு காற்றில் அலையும் சிறகு - Oru kaatril alaiyum Song Lyrics, ஒரு காற்றில் அலையும் சிறகு - Oru kaatril alaiyum Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் கடவுள் - Naan Kadavul (2009) Latest Song Lyrics