பட்டுச் சேலை காத்தாட - Pattu Selai Kaathaada Song Lyrics

பட்டுச் சேலை காத்தாட - Pattu Selai Kaathaada

பட்டுச் சேலை காத்தாட - Pattu Selai Kaathaada


Lyrics:
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே
காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
குறும்பு பார்வை பார்த்தவரே என்னக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

பட்டுச் சேலை காத்தாட - Pattu Selai Kaathaada Song Lyrics, பட்டுச் சேலை காத்தாட - Pattu Selai Kaathaada Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் சொல்லைத் தட்டாதே - Thaai Sollai Thattadhe (1961) Latest Song Lyrics