பிள்ளையார் சுழி போட்டு - Pillaiyar Suli Pottu Song Lyrics

பிள்ளையார் சுழி போட்டு - Pillaiyar Suli Pottu

பிள்ளையார் சுழி போட்டு - Pillaiyar Suli Pottu


Lyrics:
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

பிள்ளையார் சுழி போட்டு - Pillaiyar Suli Pottu Song Lyrics, பிள்ளையார் சுழி போட்டு - Pillaiyar Suli Pottu Releasing at 11, Sep 2021 from Album / Movie பக்திப்பாடல்கள் - Tamil Devotional (2013) Latest Song Lyrics