ரோஜாவை தாலாட்டும் - Rojavai Thaalattum Song Lyrics

ரோஜாவை தாலாட்டும் - Rojavai Thaalattum

ரோஜாவை தாலாட்டும் - Rojavai Thaalattum


Lyrics:
பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்...)
பெண்: மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
(மௌனமே...)
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு..ஹூ
ஆண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பெண்: பொன்மேகம் நம் பந்தல்
ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெண்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
(வசந்தங்கள்..)
ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
(பூவிலே...)
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
 
ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்
பெண்: உன் வார்த்தை சங்கீதங்கள்
பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்
கோரஸ்: பொன்மேகம் நம் பந்தல்

ரோஜாவை தாலாட்டும் - Rojavai Thaalattum Song Lyrics, ரோஜாவை தாலாட்டும் - Rojavai Thaalattum Releasing at 11, Sep 2021 from Album / Movie நினைவெல்லாம் நித்யா - Ninaivellam Nithya (1982) Latest Song Lyrics