சேலையில வீடு கட்டவா - Salayela Veedu Song Lyrics

சேலையில வீடு கட்டவா - Salayela Veedu

சேலையில வீடு கட்டவா - Salayela Veedu


Lyrics:
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க
(சேலையில)
தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசைந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒழித்து வைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே
(சேலையில)
மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பணியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று thoanudhae
காலநேரமேன்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா
(சேலையில)

சேலையில வீடு கட்டவா - Salayela Veedu Song Lyrics, சேலையில வீடு கட்டவா - Salayela Veedu Releasing at 11, Sep 2021 from Album / Movie அவள் வருவாளா - Aval Varuvaala (1998) Latest Song Lyrics