கால் இரண்டும் மண் மேல பாவ - Sangeetha Kuyile En Song Lyrics

கால் இரண்டும் மண் மேல பாவ - Sangeetha Kuyile En

கால் இரண்டும் மண் மேல பாவ - Sangeetha Kuyile En


Lyrics:
ஆண் : கால் இரண்டும் மண் மேல பாவ
உன் கண்ணிரெண்டும் என் மேலே தாவ
அட உன்னப் போல ஊருக்குள்ள யாருமில்ல
வாடிப் புள்ள....
சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி
நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு
கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி ( 2 )
பெண் : ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது
அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது
ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது
அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது
ஆண் : மஞ்சத் தாவணி காத்தில் ஆடி என்ன வாட்டுது
பெண் : நெஞ்சம் ஆவணி மாசம் தங்கத் தாலிக் கேக்குது
ஆண் : ஹே ஆகட்டும் கொஞ்சக் காலம்தான்
அள்ளிக் கொண்டு போவேனே இந்த மாமன்தான்
மெல்லத்தான் அணைப்பேன் கிட்ட வா என் பூந்தேனே
பழக வரும்......
சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி....ஹாங்..
ஆண் : சோளக்காடு நம்ம சேத்து வச்சது
என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது
சோளக்காடு நம்ம சேத்து வச்சது
என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது
பெண் : பட்டுப் பாயில சாயும்போதும் தூக்கம் வல்லையே
ஆண் : கெட்டி மேளத்தை கேட்கும் வரை ஏக்கம் தொல்லையே
பெண் : ஹோய் தாலிக்கு சொல்லிவிடுங்க
சொந்தம் கொள்ளும் நாள் மட்டும் தள்ளி இருங்க
அந்த நாள் வருவேன் இந்த மாமன் தோள் மேலே பூப்போலே...
ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே
நீ அசைஞ்சு நடக்கையிலே
மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி
நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு
கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி
பெண் : சங்கீதக் குயில்தான் உன் சிங்கார மயில்தான்
நீ அணைச்சு புடிக்கையிலே
மனசு கெடந்து இங்கே துடியா துடிக்குதய்யா
புது கண்டாங்கி வாங்கிக்கிட்டு
கல்யாண நாள் பார்த்து வந்தாக்க போதுமய்யா...

கால் இரண்டும் மண் மேல பாவ - Sangeetha Kuyile En Song Lyrics, கால் இரண்டும் மண் மேல பாவ - Sangeetha Kuyile En Releasing at 11, Sep 2021 from Album / Movie வலது காலை வைத்து வா - Valathu Kaalai Vaithu Vaa (1989) Latest Song Lyrics