வினையாலே வந்த தீமை - Vinaiyinaale Vandha Theemai Song Lyrics

வினையாலே வந்த தீமை - Vinaiyinaale Vandha Theemai

வினையாலே வந்த தீமை - Vinaiyinaale Vandha Theemai


Lyrics:
வினையாலே வந்த தீமை தனை
நினைந்தே நோவதேனோ
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே
அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ..
களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ
நன்மையெனும் நல்ல விதையாலே-தாயே நீ
உன் மகனை உருவாக்கவிலையே
தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே.....

வினையாலே வந்த தீமை - Vinaiyinaale Vandha Theemai Song Lyrics, வினையாலே வந்த தீமை - Vinaiyinaale Vandha Theemai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை மகன் - Aasai Magan (1953) Latest Song Lyrics