யார் அந்த ஓவியத்தை - Yar antha oviyaththai Song Lyrics

யார் அந்த ஓவியத்தை - Yar antha oviyaththai

யார் அந்த ஓவியத்தை - Yar antha oviyaththai


Lyrics:
யார் அந்த ஓவியத்தை
நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க
கால நேரம் வந்ததோ
கண்ணாடி மாளிகையே
கண் வைத்து பார்த்ததோ
முன்னே அவள் நின்ற போது
கண்கள் கூசி போனதோ
உலக அழகி இல்லை
உலவும் நிலவும் இல்லை
பழக தோழியா தெரியிறா
அதிர சிரிப்பும் இல்லை
அதிக சிவப்பும் இல்லை
அழகின் ஓவியமா அசத்துறா
கவிதை போல வந்து
கனவு போல வந்து
உனக்கு அப்படியே பொருந்துறா
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா
அவதான் உன் மாமன் பொண்ணு
அயில மீன் கண்ணே கண்ணு
உனக்கான ஜோடியின்னு
நான் பார்த்து அசந்த பொண்ணு
என்னன்னு நான் சொல்ல
அழகுன அத்தனை அழகு
அன்றாடம் நீ மெல்ல
ஐ லவ் யூ சொல்லி பழகு
நான் பார்த்த தேவதைக்கு
சிறகில்லை உண்மையில்
அவள் போல பெண்ணை நானும்
பார்த்ததில்லை அண்மையில்
தரை மேலே நின்ற போதும்
மிதக்கின்றாள் மென்மையில்
தங்கத்தை ஊற்றி ஊற்றி
வார்த்து வைத்த பொன்மயில்
லட்சம் பூ பறிச்சு
மிச்சம் தேன் தெளிச்சு
வச்ச அழகு அவ அழகடா
அச்ச பார்வையில
உச்சம் கவிதை ஒன்னு
அச்சில் எட்டி விடும் அடடடா
கச்ச தீவுக்கொரு
மச்சம் வச்சது போல்
பச்சை பசுமை அவ பாரடா
அழகடா அவளடா அசந்து போலாம்டா
அவள் கண்கள் கவிதை பக்கம்
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்
அவள் வந்து முன்னே நின்றால்
நிலவெல்லாம் பின்னே நிற்கும்
மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல
கண்ணாடி சிலையை போல
முன்னாடி சிரிச்சு போறா
ஆத்தாடி உன் மனச
அங்காடி ஆக்க போறா
மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல

யார் அந்த ஓவியத்தை - Yar antha oviyaththai Song Lyrics, யார் அந்த ஓவியத்தை - Yar antha oviyaththai Releasing at 11, Sep 2021 from Album / Movie களத்தில் சந்திப்போம் - Kalathil Santhippom (2021) Latest Song Lyrics