துரையே இளமை பாராய் - Duraiye Ilamai Paaraai Song Lyrics

துரையே இளமை பாராய் - Duraiye Ilamai Paaraai

துரையே இளமை பாராய் - Duraiye Ilamai Paaraai


Lyrics:
துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா
வேகமாய் ஓடி வா.......(துரையே)
இசை பாடும் கண்கள் மீதே
இள நெஞ்சம் காட்டும் மாதே
உன்னைத் தேடி வந்தாள் ஐயா
மெய் இன்பம் காண வாராய்.....(துரையே)
கண்ணாலே பேசி வரும்
காந்தச் சிலை மான்விழி
காதல் கீதம் பாடும் தேன்மொழி
வானவில் வர்ணங் காட்டும் பூங்கொடியை
வந்து பார் வண்ணத் தேரிலே...
சந்தோஷமே கொண்டாடலாம் - தென்றல்
தாலாட்டும் நல் இன்பக் காவிலே.......(கண்ணாலே)
விஞ்ஞானக் கண்ணோட்டம் போதுமே
மெஞ்ஞானப் பெண்ணாளைப் பாருமே
உல்லாச எண்ணங்கள் இல்லாத உள்ளங்கள்
வாழ்வில் இன்பம் காணுமோ
கவிபாடும் கண்கள் மீதே
கலை ஞானம் கூறும் மாதே
கன்னல் மேனி கண்டேன் கண்ணே
மெய்க்காதல் கூற வாராய்
திருநாள் புதுமை காண்போம்
கதைகள் கேட்போம் ஒன்றாய் வாழ்வோம்
மணமே கொள்வோமே அன்பே
தாழ்விலா வாழ்வெலாம் காணுவோம்...!

துரையே இளமை பாராய் - Duraiye Ilamai Paaraai Song Lyrics, துரையே இளமை பாராய் - Duraiye Ilamai Paaraai Releasing at 11, Sep 2021 from Album / Movie கதாயாயகி - Kathanayaki (1955) (1955) Latest Song Lyrics