காற்று வாங்கப் போனேன் - Kattru Vaanga Song Lyrics

காற்று வாங்கப் போனேன் - Kattru Vaanga

காற்று வாங்கப் போனேன் - Kattru Vaanga


Lyrics:
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)
என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

காற்று வாங்கப் போனேன் - Kattru Vaanga Song Lyrics, காற்று வாங்கப் போனேன் - Kattru Vaanga Releasing at 11, Sep 2021 from Album / Movie கலங்கரை விளக்கம் - Kalangarai Vilakkam (1965) Latest Song Lyrics