மல்லிகை முல்லை - Maligai Mulai Song Lyrics

மல்லிகை முல்லை - Maligai Mulai

மல்லிகை முல்லை - Maligai Mulai


Lyrics:
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள்
தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு
ஊர்கோலம் போனாள்
தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு
ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள்
தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
ராம நாமம் தந்த ராகம்
லவனாக குசனாக உருவான கீதம்
மாமன் என்று சொல்ல
ஒரு அண்ணன் இல்லை அங்கே
அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்

மல்லிகை முல்லை - Maligai Mulai Song Lyrics, மல்லிகை முல்லை - Maligai Mulai Releasing at 11, Sep 2021 from Album / Movie அண்ணன் ஒரு கோவில் - Annan Oru Koyil (1977) Latest Song Lyrics