முந்தானைய நான் புடிச்சேன் - Munthanaiya Naan Pudichen Song Lyrics

முந்தானைய நான் புடிச்சேன் - Munthanaiya Naan Pudichen

முந்தானைய நான் புடிச்சேன் - Munthanaiya Naan Pudichen


Lyrics:
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல
உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
ஞாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
ஞாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு
அத தேடிப் புடிச்சேன்
முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு
மனம் வாடித் தவிச்சேன்
பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு
ஒரு பாடம் படிச்சேன்
இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை
ரெண்டு பாட்டில் அடிச்சேன்
பொல்லாத ஆசையினாலே...ஹே ஹே
பொல்லாத ஆசையினாலே
பொண்ணோட பேச்சை நம்பி
இல்லாத ஊருக்குத்தானே
எல்லோரும் போறோம் தம்பி
சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு
சன்யாசம் தான் புடிச்சுப் போச்சு
இன்னும் என்ன எடத்த மாத்து
எல்லாம் இங்கே படுதா போத்து
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல..
முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா
அவ பூத்து சிரிச்சா
அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான்
கண்ணில் மூடி மறைச்சா
செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா
அவ சீரு கொடுத்தா
அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு
கெட்ட பேரு எடுத்தா
மல்லாக்க படுத்துப் பார்த்தேன்..ஓஓஓ
மல்லாக்க படுத்துப் பார்த்தேன்
மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு
என் வீட்டில் வெளக்கு போட்டேன்
எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு
பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு
என் வீட்டுல இன்னொரு கண்ணு
என்ன கத புரியலயின்னு
ஒத்தையில தவிக்கிறேன் நின்னு
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல
உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
ஞாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
ஞாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா
முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல

முந்தானைய நான் புடிச்சேன் - Munthanaiya Naan Pudichen Song Lyrics, முந்தானைய நான் புடிச்சேன் - Munthanaiya Naan Pudichen Releasing at 11, Sep 2021 from Album / Movie புருச லட்சணம் - Purusa Latchanam (1993) Latest Song Lyrics