அதைர்யம் கொள்வது அறிவீனம் - Adhairiyam Kolvadhu Ariveenam Song Lyrics

அதைர்யம் கொள்வது அறிவீனம் - Adhairiyam Kolvadhu Ariveenam

அதைர்யம் கொள்வது அறிவீனம் - Adhairiyam Kolvadhu Ariveenam


Lyrics:
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
நதி மீதில் படகு போவது போலே
வாழ்க்கையிலே முன் செல்லுவோம்
ஹஹஹஹா பிராவகம் போலே
ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்...
ஹஹஹஹா வானில் மேவும் வெண்ணிலாவின்
வளரும் பிறையே போலே
எண்ணிடும் இளமை தென்றலாலே
இனிமை பரவும் ப்ரேமை
இதமாய் என்றும் வாழ்வோம்......(அதைர்யம்)
ஓஓ...ஒளியும் விழியும் போலே இருவரும் ஓஒ..
ஒன்றென உண்மையாகவே
உலகின் தோழமை நேசத்தாலே
ஆதரவோடு வாழுவோமே
ஆனந்தமே கொண்டாடுவோமே.......
மெய்யுடைய காதல் மேவும் ஓடை
மிதக்கும் ஓடமே வாழ்க்கை
மேலுயர் மார்க்கம் காண்போம்
ப்ராவகம் போலே ப்ரேமையினாலே
பாரினில் இன்பம் காண்போம்.....! (அதைர்யம்)

அதைர்யம் கொள்வது அறிவீனம் - Adhairiyam Kolvadhu Ariveenam Song Lyrics, அதைர்யம் கொள்வது அறிவீனம் - Adhairiyam Kolvadhu Ariveenam Releasing at 11, Sep 2021 from Album / Movie குமாரி - Kumari (1952) Latest Song Lyrics