நாதர்முடி மேல் - Nadhar Mudi Melirukkum Song Lyrics

நாதர்முடி மேல் - Nadhar Mudi Melirukkum

நாதர்முடி மேல் - Nadhar Mudi Melirukkum


Lyrics:
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு (7 முறை)
சங்கம் அமைத்தொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர் தம் நாவினில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கள குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாதன் சூடிய நாகப்பாம்பே உன்மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண்மேல் ஆணை
சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை
உன் மேல் ஆணை

நாதர்முடி மேல் - Nadhar Mudi Melirukkum Song Lyrics, நாதர்முடி மேல் - Nadhar Mudi Melirukkum Releasing at 11, Sep 2021 from Album / Movie திருவருட்செல்வர் - Thiruvarutchelvar (1967) Latest Song Lyrics